குடவாசல் வட்டாட்சியர் அலுவலகம் வளாகத்தில் பல லட்சம் செலவில் சுகாதாரக் கழிவறை கட்டப்பட்டது. பணிகள் நிறைவடைந்து மூன்று மாதங்களாகியும் திறக்கப்படவில்லை. தற்போது கட்டடத்தைச் சுற்றி புதர் மண்டியுள்ளது. கட்டடத்தின் உட்பகுதியும் சேதடைந்து விட்டது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் செயலாளர் டி.ஜி.சேகர் அதிகாரிகளிடம் புகாரளித்துள்ளார்.