திருவாரூர் மாவட்டம் குடவாசல் பேரூராட்சிக்குட்பட்ட குடவாசல் - நன்னிலம் சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் பழுதான புளியமரம் சாய்ந்த நிலையில் இருந்தது. இதை அகற்றக் கோரி கடந்த 24 ஆம் தேதி தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது. தீக்கதிர் செய்தி எதிரொலியாக வெள்ளிக்கிழமை, பழுதான புளியமரத்தை பொதுப்பணி துறையினர் வெட்டி அகற்றினர்.