districts

img

திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத்தில் இந்தியாவிலே முதன் முதலாக செப்புப் பட்டயங்கள் பற்றிய நூல் தொகுப்பு

திருவாரூர், ஏப்.21- திருவாரூர் தமிழ்நாடு மத்தி யப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்  துறை, கல்வெட்டியல் மற்றும்  மரபு மேலாண்மைப் பட்டயப் படிப்புத் துறை சார்பாக, “செப்பேடு கள் உணர்த்தும் தமிழக வரலாறும்  பண்பாடும்” நூல் வெளியீட்டு விழா  மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்கம் சென்னை செவாலியர் டி.தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி தமிழ்த்  துறையுடன் இணைந்து நடைபெற்றது.

தமிழக வரலாறும் பண்பாடும் என்ற தலைப்பில் ஒருநாள் பன் னாட்டுக் கருத்தரங்கம் ஏப்ரல் 15 அன்று சென்னை செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி யில் நடைபெற்றது. 

இந்நிகழ்வுக்கு தமிழ்நாடு மத்  திய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மு.கிருஷ்ணன் தலைமை வகித்து உரையாற்றினார். சிடிடிஇ கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். ஸ்ரீதேவி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழ கத்தின் சமுதாயக் கல்லூரி, கல்  வெட்டியல் மற்றும் மரபு மேலா ண்மை பட்டயப் படிப்புத் துறை பொறுப்பாசிரியர் ச.இரவி நோக்க உரையாற்றினார். 

இதில் அறிஞர்கள், ஆய்வாளர்  கள், வரலாற்று ஆர்வலர்கள் எழு திய ஆய்வு நூல் தொகுப்பைத் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழ கத் துணைவேந்தர் மு.கிருஷ்ணன்  வெளியிட, சிடிடிஇ கல்வி அறக்கட் டளை தாளாளர் இல.பழமலை பெற்றுக் கொண்டார்.

இந்நூலின் பதிப்பு ஆசிரிய ரும், தமிழ்நாடு மத்தியப் பல்க லைக் கழகம் கல்வெட்டியல் மற்றும்  மரபு மேலாண்மை பொறுப்பாசிரிய ருமான ச.இரவி பேசுகையில், “இந்  தியாவிலேயே முதன் முதலாகச் செப்புப் பட்டயங்கள் பற்றி அறி ஞர்கள் எழுதிய, நூல் தொகுப்பு வெளி வருவது இதுவே முதல்  முறை. இந்த நூலில் 83 அறிஞர்  களின் கட்டுரைகள், 718 பக்கங்க ளில் வெளி வந்திருக்கின்றன.

தொடக்கக் காலப் பல்லவர், பாண்டியர்கள், இடைக்காலச் சோழர்கள், பிற்காலப் பாண்டி யர்கள், விஜயநகர, நாயக்கர்கள், பாளையக்காரர்கள், மராட்டி யர்கள், ஜமீன்தார்கள், தொண்டை மான்கள், சேதுபதிகள் பற்றிய கட்டு ரைகள் இடம் பெற்றுள்ளன.

தமிழ் எழுத்து வரலாற்றை ஆராய வேண்டுமெனில் செப்புப்  பட்டயங்களில் எழுதப்பட்ட பாலி,  பிராக்கிருதம், சமஸ்கிருதம், தமிழ், மராத்தி, தெலுங்கு, கன்ன டம் போன்ற மொழி எழுத்துக்களை யும் ஆராய வேண்டும். மேலும்,  மறைந்துபோன தமிழக வர லாற்றை மீட்டுருவாக்கம் செய்து உண்மையான வரலாற்றை எழுத  இந்த நூலின் தொகுப்பு முக்கியப்  பங்கு அளிக்கும்” என்று தெரிவித் தார்.

தலைமை உரையாற்றிய மத்தி யப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் மு.கிருஷ்ணன், “முறை யான தலைமுறை தமிழக வர லாற்றை எழுதுவதற்கு ஓலைச் சுவடிகள், கல்வெட்டுகள் போல்  செப்புப் பட்டயங்களும் மூல ஆதார  ஆவணங்களாக விளங்குகின்றன. ஓலைச் சுவடிகள் வழக்கில் இருந்த  காலத்தில், செப்புப் பட்டயங்கள் தோன்றிய காரணத்தை அறிஞர்கள்  ஆராய வேண்டும். அறிவியல் முறைப்படி செப்புப் பட்டயங்கள் கூறும் கருத்துகளை ஆராய்ந்து, இதுவரை கூறப்படாத தமிழக வர லாற்றையும் மக்களின் வாழ்க்கை முறைகளையும் வெளியிடுவதற்கு இந்த நூல் மிகவும் ஆதாரமாக இருக்கிறது. செப்பேடுகள் கூறும்  கருத்துகளை மக்களிடம் எடுத்துச்  செல்லும் பொறுப்பு ஆய்வாளர் களிடம் உள்ளது” என தெரிவித்தார். 

நிகழ்ச்சியில் ஐந்து அமர்வு களில் 100 கட்டுரைகள் வாசிக்கப் பட்டன. இக்கருத்தரங்கில் பங்  கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்  கள் வழங்கப்பட்டன. தமிழ்த் துறைத் தலைவர், பேராசிரியர்கள், தொல்லியல், கல்வெட்டியல் அறி ஞர்கள் பங்கேற்றனர்.