திருவாரூர், ஜுன் 19- திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஒன்றியத்தில் 100 நாள் வேலையை அனைத்து ஊராட்சிகளிலும் துவங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி அகில இந்திய விவசா யத்தொழிலாளர் சங்கத்தின் நன்னிலம் ஒன்றியக்குழு சார்பாக நன்னிலம் ஊராட்சி ஒன்றிய வட்டார ஆணை யரிடம் மனு அளிக்கப்பட்டது.
விவசாயத்தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் ஆர்.சுந்திரமுர்த்தி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலா ளர் சரவண சதிஷ்குமார், பொருளாளர் ஏ.சங்கர்மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.