districts

img

பொங்கல் நாளன்று வங்கித் தேர்வா? தேதி மாற்றக் கோரி திருவாரூர் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஜன.9-  தமிழர் திருநாள் தை பொங்கல் அன்று பாரத ஸ்டேட் வங்கி (SBI)  எழுத்தர் தேர்வினை நடத்த உத்தர விட்டுள்ள மோடி அரசை கண்டித்  தும், தேதி மாற்றி அறிவித்திட வலி யுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருவா ரூர் மாவட்டத்தில் 5 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  திருவாரூரில் மாவட்டத் தலை வர் ஏ.கே.வேலவன், நன்னிலத்தில் ஒன்றியச் செயலாளர் கே.எம்.பாலா, கொரடாச்சேரியில் ஒன்றி யச் செயலாளர் எம்.எஸ்.ஜெய்  கிஷ், வலங்கைமானில் ஒன்றியச் செயலாளர் பா.விஜய், குடவாச லில் ஒன்றியச் செயலாளர் கா. பகத்சிங் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பா. ஆனந்த், வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் எம்.டி.கேசவராஜ், மாவட்டத் துணைத் தலைவர் சுரேந்தர், ஒன்றிய தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், வாலிபர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.