districts

img

திருவாரூரில் 1000 தீக்கதிர் சந்தாக்கள் பதிவு

திருவாரூர், ஜூலை 9- திருவாரூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தில் கட்சித் தோழர்கள், வர்த்தகர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களிடம் ஆயிரம் சந்தாக்கள் பதிவுசெய்யப் பட்டன.

மாவட்டத்தில் ஜூலை 8, 9 ஆகிய இரு தினங்களில் சந்தா பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி மற்றும் மாவட்ட அலுவலக செய லாளர் எம்.கலைமணி, தீக்கதிர் மாவட்ட பொறுப்பாளர் டி.முருகையன் ஆகி யோர் பங்கேற்றனர்.

திங்களன்று நன்னிலம், குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம், கொரடாச்சேரி, திருவாரூர் உள்ளிட்ட ஒன்றியம், நகரம் மற்றும் சிஐடியு மத்தியதர அரங்கம் மூலம் தீக்கதிர் சந்தா தொகை பெறப்பட்டது.

செவ்வாயன்று திருத்துறைப் பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர், மன்னார்குடி ஆகிய ஒன்றிய, நகரங் களில் சந்தா தொகை பெறப்பட்டன. தீக்கதிர் ஆண்டு சந்தா 246, அரை யாண்டு சந்தா-181 என மொத்தம் 427 சந்தாவுக்கான தொகை ரூ.6,82,750-ஐ, முதல் கட்டமாக கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகத்திடம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி வழங்கினார். சந்தா தொகையை பெற்றுக் கொண்ட மத்தியக் குழு உறுப் பினர் பெ.சண்முகம், சந்தா பெறும் இயக்கத்தில் பங்கேற்ற கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட்ட உறுப்பி னர்கள், ஒன்றிய, நகர குழு உறுப்பி னர்கள், கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார்.