திருவள்ளூர், நவ 7- பெரியபாளையம் பேருந்து நிறுத்தத்திற்கு செல்லும் வழியில் இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத் தப்படுவதால் பேருந்துகள் உள்ளே சென்று திரும்ப முடியாமல் ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்கு நாள் தோறும் ஏராளமான பக்தர் கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ஏராளமான மாநகர பேருந்துகள் பெரிய பாளையம் வந்து செல்கிறது. இதன் மூலம் ஆயிரக்கணக் கான மக்கள் வந்து பயணிக்கின்றனர். போக்குவரத்து எண் ணிக்கைக்கு ஏற்ப பேருந்து நிலையம் மிகவும் குறுக லான இடமாக இருப்ப தால் பேருந்துகள் உள்ளே சென்று திரும்ப முடியாமல் திணறுகிறது. இந்த நிலை யில் பேருந்து நிறுத்தத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் சுற்றிலும் நிறுத்தப்படுவதால் பேருந்துகளை உள்ளே சென்று திருப்ப முடியா மல் ஓட்டுனர்கள் அவதிப்படு கின்றனர். மேலும் பேருந்து கள் நிறுத்தத்தின் மேலே தனியார் கடைகளின் மின் வயர்கள் ஆபத்தான நிலை யில் தொங்குகிறது. அவை கள் அறுந்து விழும் நிலை யில் உள்ளது. வடகிழக்கு பருவமழை துவக்கியுள்ள நிலையில், மக்களின் நலன் கருதி குறுக்கும் நெடுக்கு மாக செல்லும் மின் ஒயர் களை உடனடியாக அகற்ற வேண்டும், பேருந்து நிறுத் தத்தின் உள்ளே நிறுத்தி வைத்துள்ள இரு சக்கர வாகனங்களை அப்புறப் படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.