திருவள்ளூர், டிச.8- திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு , வானவில் மன்றத்தின் மூலமாகஅறிவியல் உபகரணப் பெட்டி ( கிட்ஸ்) வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த.இராமன், மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் தேவராஜ் , முதன்மை கருத்தாளர் வனிதா ,தமிழ்நாடு அறிவியல் இயக்க திருவள்ளூர் மாவட்ட செயலாளர் எஸ்.மோசஸ் பிரபு, மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நளினி , பரிக்ஷான், சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.