திருவள்ளூர், ஜூன் 15- குப்பைக்கழிவுகளில் மூழ்கிக் கொண்டிருக்கும் கும்மிடிப்பூண்டி நகரையும் அப்பகுதி மக்களையும் அரசு காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் சுமார் 600க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்படு கிறது.
இங்குள்ள பெரும்பாலான தொழிற்சாலைகளில் மாசுக்கட்டுப்பாட்டுவாரியத்தின் விதிமுறைகள் பின்பற்றுவது கிடையாது. குறிப்பாக தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் மண் கழிவு, குப்பைகள், ரசாயன கழிவு, திரவ கழிவு இப்படி வெளியேற்றப்படக் கூடிய அத்தனை கழிவுகளும் சிப்காட் யொட்டி உள்ள தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் கொட்டப்படுகிறது. இது கன்னி யம்மா ரயில்வே கேட் அருகே இருந்து கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலை ஓரங்களில் கொட்டப்பட்டு வருகிறது.
சென்னை உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் ரசாயனம் குப்பைகளை கொண்டு வந்து கும்மிடிப்பூண்டிநகரில் குவித்து வருகின்றனர். இவை கள் எல்லாம் எளிதில் தீப்பற்றி எரியக் வடிய ஆபத்தான நிலை உள்ளது என்கிறார்கள். இதுகாற்றை மாசுப்படுத்தி மக்களின் சுவா சத்திற்கு பெரும்கேடு விளைவிப்ப தாக அச்சம் தெரிவித்துள்ளனர். தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் மாசுகளை ஆய்வு செய்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாறாக புகார் கொடுப்ப வர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை சேர்ந்த சில அதிகாரிகள் கையூட்டல் பெற்றுக்கொண்டு அளித்து வருகின்றனர். குப்பையால் சூழப் பட்ட கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றது. இந்த விபத்துக்களால் வடமாநில தொழி லாளர்கள் உயிரிழக்கும் நிலை தொடர்கதையாக இருக்கிறது. இதன் வெளிப்பாடுதான் சமீபத்தில் கும்மிடிப்பூண்டியில் உள்ள வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் தீ பற்றி எரிந்து கரும்புகை நகர் முழுவதும் சூழ்ந்தது. இந்த தீயை கிட்டத்தட்ட 8 மணி நேரம் போராட்டத்தின் பிறகு அணைக்கப்பட்டது.
ஏற்கெனவே கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மக்கள் வாழ தகுதியற்ற பகுதியாக மாறிவருகிறது. இதனால் அப்பகுதிமக்களின் உள் உடல்உறுப்புகள் பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். சமையலறை உள்ள உண வில் கூட கரித்துகள்கள் கலக்கும் அளவிற்கு நிலைமை சென்றுள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்மிடிப் பூண்டி வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், வட்ட குழு உறுப்பினர் ப.லோகநாதன் ஆகியோர் தெரிவிக்கையில், கும்மிடிப்பூண்டி மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வாசல் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் சட்ட விரோதமாக மலை போல் குவிந்துள்ள குப்பைக் கழிவுகளை கூட அகற்ற நடவடிக்கை எடுக்க வில்லை. சிப்காட் முழுவதும் ஆங்காங்கே குப்பைகள், ரசாயன கழிவுகளால் நீர், நிலம், காற்று என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். எதிர்வரும் காலங்களில் மக்கள் வாழ தகுதியான பகுதி யாக கும்மிடிப்பூண்டி பகுதியை மாற்ற வேண்டும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஊழல் அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். - பெ.ரூபன்