districts

img

இலவச குடி மனை பட்டா : வாக்குறுதி அளிக்கும் வட்டாட்சியர்கள் எங்கே?

திருவள்ளூர், மார்ச் 3- வேட்டைக்காரன் மற்றும் பழங்குடி இருளர் இன மக்களுக்கு குடி மனை பட்டா கேட்டு ஊத்துக்கோட்டை வட்டாட் சியர் அலுவலகம் அருகில் மலைவாழ் மற்றும் பழங்குடி மக்கள் சார்பில் புதனன்று (மார்ச்-2)தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக் கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட வேள காபுரம், எல்லம்பட்டி, தொளவேடு,  வட மதுரை ஆகிய கிராமங்களில் வாழும் வேட்டைக்காரன் இன மக்களுக்கும், மெய்யூர், வெம்பேடு, அரியத்தூர் ஏனம் பாக்கம் ஆகிய கிராமங்களில் வாழும் இருளர் இன மக்களுக்கும் இலவச குடிமை பட்டா கேட்டு ஊத்துக்கோட்டை வட்டாட்சியரிடம் தொடர்ந்து கடந்த மூன்று வருடங்களாக மனுக்கள் கொடுத்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து விரைவில் இம்மக்களுக்கு இலவச குடி மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க ப்படும் என அதிகாரிகள் எழுத்து பூர்வ மாக உறுதி அளித்துள்ளனர். ஆனால் மூன்று வருடங்கள் கடந்த பிறகும் மேற்கண்ட கிராமத்தில் உள்ள மக்க ளுக்கு ஒருவருக்கு கூட இலவச குடி மனை பட்டா வழங்கப்படவில்லை. வாக்குறுதி அளித்த வட்டாட்சியர்கள் பலர் பணி மாறுதலாகி சென்று விடுகின் றனர். அரசு பழங்குடி இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட பல்வேறு உத்தரவுகள், அரசு ஆணை கள் பிறப்பிக்கப்பட்ட போதும், மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் அதை அமல்படுத்தாமல் பழங்குடியின மக்களை பந்தாடி வருகின்றனர்.

இந்த நிலையில் பழங்குடியின மக்களுக்கு இலவச குடி மனை பட்டா வழங்காமல் காலதாமதம் செய்து வரும் வருவாய் துறை அதிகாரிகளை கண்டித்தும், விண்ணப்பித்த அனைவரும் பட்டா வழங்க கோரியும்தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம், தமிழ்நாடு வேட்டை க்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில்  தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. புதனன்று காலை 10 மணிக்கு துவங்கிய தொடர் முழக்கப் போராட்டம் மாலை வரை நீடித்தது. பட்டா கொடுக் காமல் வட்டாட்சியர் காலதாமதம் செய்த தால் தொடர் முழக்க போராட்ட இடத்தி லிருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு  மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ் அரசு தலைமை தாங்கினார்.  மாநில தலைவர் பி.டில்லி பாபு, மாநில துணை தலைவர் ஏ.வி. சண்முகம், மாவட்ட தலைவர் ஜி.சின்ன துரை, பூண்டி ஒன்றிய செயலாளர் கே.முருகன், மாவட்ட குழு உறுப்பினர் டில்லி,  வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயலாளர் இ.கங்காதுரை, மாவட்ட செயலாளர் ஜி.ராஜா, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செய லாளர் கன்னியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். காலதாமதம் ஆனதால் வட்டாட்சி யர் அலுவலகத்தை பூட்டு போடும் நடவ டிக்கையில் ஈடுபடுவோம் என தலைவர் கள் அறிவித்ததை ஒட்டி உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப் படும் என வட்டாட்சியர் ரமேஷ் எழுத்து பூர்வமாக உறுதியளித்தார். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட் டது. கொடுத்த வாக்குறுதியை நிறை வேற்றாவிட்டால் மார்ச்-18 அன்று திருவ ள்ளூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடை பெறும் என கூட்டத்தில் அறிவித்தனர்.