திருவள்ளூர், ஜூன் 4- ஊத்துக்கோட்டை அருகில் உள்ள ஏனம்பாக்கத்தில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு குடிமனை பட்டா கிடைத் ததை கேக் வெட்டி கொண்டாடினர். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகில் உள்ள ஏனம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் 30 ஆண்டுகளாக 23 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். எந்த அடிப்படை தேவைகளும் இல்லாத நிலையில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தில் இணைந்து குடிமனை பட்டா, மின் இணைப்பு, குடிநீர் போன்ற வற்றை வழங்க வேண்டும் என பல போராட்டங்கள் நடைபெற்றன. அதன் பிறகு பொதுக்குழாய் ஒன்றும், பொது விளக்கு ஒன்றும் அமைத்து கொடுத்துள்ளனர். தற்போது 14 குடும்பங்களுக்கு இலவச குடிமனை பட்டாவை மாவட்ட ஆட்சியர் வழங்கி யுள்ளார். இந்த பட்டாக்களுடன் அம் மக்கள் தலைவர்களுடன் சேர்ந்து கேக் வெட்டிக் கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் நிர்வாகி பா.முனுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.பன்னீர்செல்வம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் த.கன்னியப்பன், மாதர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஏ.பத்மா, வட்டக் குழு உறுப்பினர்கள் அருள், சந்துரு, ராமமூர்த்தி, அருணகிரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.