திருவண்ணாமலையில் உரம், யூரியா விற்பனையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தக்கோரி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போளூர் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் போராட்டம் முடிவுக்கு வந்தது.