திருவண்ணாமலை,ஜூலை2- தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட 6ஆவது மாநாடு வந்தவாசியில் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் பொன்னுசாமி தலைமை தாங்கினார், மாநில குழு உறுப்பினர் கே. விஜயா அஞ்சலி தீர்மானம் வாசித்தார், வரவேற்பு குழு தலைவர் பெ.அரிதாசு வரவேற்றார், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா. சரவணன் துவக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் எம்.மாரிமுத்து வேலை அறிக்கையையும், ஜி .சங்கர் வரவு,செலவு அறிக்கையையும் வாசித்த னர். தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின்மாவட்ட செயலாளர் டி.கே. வெங்க டேசன் சிறப்புரையாற்றி னார், அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் எம் .பிரகலாதன், அகில இந்திய வழக்கறி ஞர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ். அபி ராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ. சண்முகம் நிறை உரையாற்றினார். வரவேற்பு குழு பொரு ளாளர் அப்துல் காதர் நன்றி கூறினார்.
தீர்மானம்
பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில், பழங் குடி மக்களுக்கு என தனி சட்டமன்றத் தொகுதி உருவாக்க வேண்டும், செய்யாறு கல்வி மாவட்டத்தில் பழங்குடி யினருக்கு, ஏகலைவா உண்டு உறைவிட பள்ளி துவக்க வேண்டும், பழங்குடி இளைஞர்களுக்கு கல்வி தகுதிக்கேற்ப அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
29 பேர் கொண்ட மாவட்டக்குழுவிற்கு தலைவராக மணிமாறன், செயலாளராக எம். மாரி முத்து, பொருளாளராக பாஸ்கரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ஏராள மான பழங்குடி, மலை வாழ் மக்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது.