திருவண்ணாமலை, மார்ச். 18- ஆவின் நிர்வாகத்தில் நடைபெற்று வரும் ஊழல், ஊதாரித்தனத்தை கண்டித்து மார்ச் 24ஆம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று பால் உற்பத்தியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட சிறப்பு பேரவைக் கூட்டம் திரு வண்ணாமலையில் நடைபெற்றது. பி.லட்சுமணன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் கே.முகமதுஅலி சிறப்பு ரையாற்றினார். இதில் 10 பேர் கொண்ட அமைப்புக்குழுவுக்கு டி. கே. வெங்கடேசன் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்த கூட்டத்தில், பால் உற்பத்தி யாளர்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய் உயத்தி வழங்க வேண்டும். பால் பணம் பாக்கி வைக்காமல் உற்பத்தியளர்களுக்கு வழங்க வேண்டும். பால் கொள்முதல் செய்யும் இடத்திலேயே, பால் அளவு மற்றும் சத்து அளவு விவரங்கள் பதிவு செய்து நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும். கால்நடை தீவனத்தை 50 விழுக்காடு மானிய விலையில் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. பால் கேன் மற்றும் பால் கேன் மூடியை எடுத்துச் செல்வது, கேன்களில் தண்ணீர் கலப்பது போன்ற முறைகேடுகளை களைய வேண்டும். பால் கொள்முதல் செய்யும் சங்க செயலாளர்கள், ஊழியர்களை மிரட்டி வரும் திருவண்ணாமலை ஆவின் முதுநிலை ஆய்வாளர் உள்ளிட்ட மூவர் நடவடிக்கை எடுக்காத ஆவின் நிர்வாகத்தின் நேர்மையற்ற செயல்பாடுகளைக் கண்டித்து மார்ச் 24ஆம் தேதி மாவட்ட ஆவின் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.