districts

img

பழிவாங்கும் அதிகாரிகள்: ஆசிரியர்கள் ஆவேசம்!

திருவண்ணாமலை, ஜன. 28- திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் முன்னுரிமை பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும், கடந்த 2018-19ஆம் ஆண்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கை களுக்காக ஜாக்டோ, ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால், பழி வாங்கும் நோக்கத்தில், ஆசிரியர்களின் பதவி உயர்வு மறுக்கப்பட்டு வருகிறது. எனவே, பணியிட மாறுதல் செய்யப்பட்ட வர்களை மீண்டும் பழைய இடத்தில் பணி மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலி யுறுத்தி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வந்தவாசி வட்டார ஆசிரியர் மோகன், வந்தவாசி ஆசிரியர் சத்தியபாமா, போளூர், கலசபாக்கம் ஆசியர்கள் மீதான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு ஆணை வழங்க வலியுறுத்தி திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலகத்தில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வியாழனன்று தொடங்கிய காத்திருப்பு போராட்டம் வெள்ளியன்றும் தொடர்ந்தது.  இதையடுத்து, சங்க நிர்வாகி களுடன் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து, துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி, உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என்று கூறி னார். இதையடுத்து காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.