districts

img

விளை நிலங்களை கையகப்படுத்த மக்கள் எதிர்ப்பு

திருவண்ணாமலை, ஜன. 29- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்தில் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரங்களான துரிஞ்சலாறு, ஓலையாறு ஆகிய வற்றை உள்ளடக்கிய கவுத்தி வேடி யப்பன் மலைக்கு அருகே உள்ளது பாலியப்பட்டு கிராமம். பாலி யப்பட்டு சுற்றுவட்டார கிராம மக்க ளின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படை யாக இருக்கும் விளை நிலங்களை யும், காலம் காலமாக வாழும் இருப்பிடத்தையும் அழிக்கும் வகையில், மக்களின் கருத்துக்களை கேட்காமலும், சுற்றுப்புறச் சூழல் சட்டத்திற்கு எதிராகவும், பெரு நிறுவனங்களுக்காக சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து விவசாய நிலங்க ளும், மக்களின் இருப்பிடத்தையும் பாதிக்காத வகையில் அந்த திட்டத்தை நிறைவேற்றக் கோரி தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தை அந்த கிராம மக்கள் நடத்தி வருகின்றனர். அந்த மக்களை தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் சந்தித்து பேசினார். அப்போது விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்படாது என திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது, பாலியப்பட்டு சுற்றுவட்டார பகுதி மக்கள், விவசாயிகள், தங்கள் விளை நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அந்த நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் அமைக்க முயற்சிப்பது வன்மையான கண்டனத்திற்குறியது என்றார். அரசு தரிசு நிலங்களில் சிப்காட் அமைப்பதற்கு எந்தவித தடை யும், எதிர்ப்பும் இல்லை. மாறாக, பாலி யப்பட்டு சுற்றுவட்டார விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், வேளாண் உற்பத்தியையும் பாதிக்கும் வகை யில் இங்கு சிப்காட் அமைக்க முயற்சிப்பதை அரசு கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதேபோல் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் பியூஸ் மானுஸ், எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பு  வழக்கறிஞர் அபி ராமன், இல.அழகேசன், தீண்டாமை ஓழிப்பு முன்னணியின் மாநில துணைச்செயலாளர் ப.செல்வன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் எஸ்,ராமதாஸ், டி,கே,வெங்கடேசன், திரைப்பட இயக்குநர் லெனின் பாரதி ஆகியோர் போராட்டத்திற்கு ஆதரவாக கலந்து கொண்டனர்.