திருவண்ணாமலை,டிச.22- மக்கள் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரண மல்லூர் ஒன்றியக்கு ழு சார்பில் அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் பெரண மல்லூர் சேகரன் தலைமை தாங்கி னார். பேரூராட்சி நிர்வாகத்தை வெளிப்படைத் தன்மையுடன் அனைத்து கவுன்சிலர்களுக்கும் சம வாய்ப்பளித்து ஊழ லற்ற முறையில் நடத்த வேண்டும். ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும். சமுதாயக் கூடத்தைப் பராமரித்து எளிய மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும். காந்திநகர் பகுதிக்கு நடமாடும் கூட்டுறவுக் கடை அமைத்தல், வார்டு 1ல் பொதுக் கழிப்பிடம்,தனி மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும், நூறு நாள் வேலைத் திட்டத்தை பெரணமல்லூர் பேரூ ராட்சிக்கும் விரிவுபடுத்த வேண்டும், பழங்குடியினருக்கு வாழ்வாதார வங்கிக் கடன் மானியத்துடன் வழங்கவேண்டும் உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் கவுன்சி லர் மா.கௌதம் முத்து, கிளைச் செய லாளர்கள் மு. கபில்தேவ், சிவ குரு நாதன், வி. அஞ்சலி, ஏ. கதிரவன், கே. பெருமாள் ஆகியோர் பேசினர்.