திருவண்ணாமலை, ஜன. 6- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவரும், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டத் தலை வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வேங்கிகால் கிளைச்சார்ந்தவருமான அருண்பாஷா வெள்ளியன்று (ஜன. 6) காலமானார். அவருக்கு வயது 71. அவருக்கு முனீருன்னிசா (60) என்ற மனைவியும், ஷகிலா (38) என்ற மகளும் உள்ளனர். அன்னாரது உடலுக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், எஸ்.ராமதாஸ், நிர்வாகிகள் கண்ணன், ஆனந்தன், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி, மாநிலச் செயலாளர் சி.சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வேலூர் மாவட்ட நிர்வாகிகள் பன்னீர்செல்வம், பி.ரவி, பாலாஜி (தமுஎகச) உள்ளிட்ட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் துராபலி தெருவில் உள்ள கபர்ஸ்தானில் அடக்கம் செய்யப்பட்டது.