districts

img

மலைவாழ் மக்கள் சங்க அமைப்பு தின விழா

திருவண்ணாமலை,பிப். 16- தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் 30 ஆம் ஆண்டு அமைப்பு தினத்தையொட்டி திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 19 மையங்களில் கொடியேற்றம், பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் புஞ்சை அரசந்தாங்கல், பெரு நகர், திருவண்ணாமலை மாவட்டத்தில் தூசி, வெள்ளகுளம், பில்லாந்தாங்கல், திருப்பனங்காடு, வெம்பாக்கம், உமையாள்புரம், வயலூர், திருப்பனமூர், சித்தாமூர், சானார்பண்டை,  சோழவரம், நரச மங்கலம், மாங்கால், உக்கம் பெரும்பாக்கம், புதுப்பாளையம், தேத்துரை, மாலையிட்டன்குப்பம், பாதிரி ஆகிய கிராமங்களில் நடை பெற்ற அமைப்பு தின விழாவுக்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.மாரிமத்து தலைமை தாங்கினார். மலைவாழ் மக்கள் சங்க கொடி யேற்றி பெயர் பலகை திறந்து வைத்து, 30 ஆண்டுகால சங்க செயல்பாடு கள் குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் மற்றும் மலைவாழ் மக்கள் சங்க பொதுச் செயலாளர் இரா.சரவணன் ஆகியோர் விளக்க உரையாற்றினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க காஞ்சி புரம் மாவட்டத் தலைவர் சாரங்கன், மாவட்டச் செயலாளர் கே.நேரு, திரு வண்ணாமலை மாவட்டத் தலைவர் டி.கே.வெங்கடேசன், பெருமாள், சி. சங்கர், சிபிஎம் செய்யாறு வட்டச் செய லாளர் டி.வெங்கடேசன், விவசாயிகள் சங்க வட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.