ஆரணி,ஜூலை 6- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர தேவிகாபுரம் சாலையில் கூட்டுறவு நகர வங்கி கிளை இயங்கி வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டில் வங்கியின் மேலாள ராக ஆரணியை சேர்ந்த லிங்கப்பா நகை மதிப்பீட்டாளராக மோகன் உள்ளிட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். மேலும் கடந்த 2021 சட்ட மன்ற தேர்தலில் திமுக தேர்தல் வாக்குறுதியில் 5 சவரன் தங்க நகை தள்ளு படி செய்வதாக வாக்குறுதி அளித்தது. இதனால் வங்கி மதிப்பீட்டாளர் மோகன் என்பவர் சுமார் 8.4 கிலோ போலியாக நகை வைத்து பணத்தை கையாடல் செய்துள்ளார். செய்யார் துணை பதிவாளர் கமலக்கண்ணன் சென்னையில் உள்ள வணிக குற்ற புலனாய்வு பிரிவில் அளித்த புகாரின் பேரில் ஆரணி நகர கூட்டு றவு வங்கியின் மேலாளர் லிங்கப்பா, காசாளர் ஜெகதீசன், கிளார்க் சர வணன், நகை மதிப் பீட்டாளர் மோகன் ஆகிய 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் ஆரணி நகர வங்கியின் கூட்டுறவு நிர்வாக தலைவர் அதிமுக சேர்ந்த நகரச் செயலாளர் அசோக்குமார் துணைத் தலைவர் ஏ.ஜி.ஆனந்த் ஆகிய 2 பேரிடம் கூட்டுறவு சங்க அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு கடந்த 11.3.22 அன்று நகர கூட்டுறவு வங்கி மேலா ளர் லிங்கப்பா மற்றும் கூட்டுறவு சங்க தலைவர் அசோக்குமார் உள்ளிட்ட 4 பேரை வணிக குற்ற புல னாய்வு பிரிவு காவல்துறை யினர் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்த னர். இதனையடுத்து புதிய ஆரணி கூட்டுறவு வங்கி தலைவராக ஏ.ஜி.ஆனந்த் என்பவர் நியமிக்கபட்டார். இதனை தொடர்ந்து ஆரணி நகர கூட்டுறவு சங்கத்தில் கையாடல் மற்றும் ஊழல் செய்தது நிரூ பணம் ஆனதால் ஆரணி கூட்டுறவு சங்க நிர்வாக குழுவை கலைத்து திருவண்ணாமலை மாவட்ட இணை பதிவாளர் நடராஜன் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.