districts

img

ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, ஜூலை 8- 100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேத்துப்பட்டு வட்ட செயலாளர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எம். பிரகலாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரணமல்லூர் ஒன்றியச் செயலாளர் பெரணமல்லூர் சேகரன், சேத்துப்பட்டு வட்டார செயலாளர் எல்லப்பன், இடைக்குழு உறுப்பினர் கே. மணிவண்ணன், கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகி பாலமுருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பெரணமல்லூர் ஒன்றிய செயலாளர் ந. பிரபாகரன், சேத்துப்பட்டு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உரையாற்றினர். தங்கமணி நன்றி கூறினார்.