districts

img

வழிபாட்டு உரிமை கோரும் தலித் மக்கள்

திருவண்ணாமலை,ஜன.27- திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் தென்முடியனூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மாரியம்மன் கோவில் உள்ளது.  அந்த பகுதியில் பத்திற்கும் மேற்பட்ட சமு தாயத்தினர் வசிக்கின்றனர்.  ஆண்டுதோறும் ஊர் கூடி மாரியம்மன் கோவில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். கடந்த 60 ஆண்டு  களுக்கு முன்பு வரை பட்டியல் இன மக்கள் இந்த திருவிழா வில் பங்கேற்று வந்தனர். ஒரு நாள் விழா பட்டியல் இனத்தவருக்கு என ஒதுக்கப்பட்டு விழாக்  கள் நடைபெற்று வந்துள் ளது. இடையில்ஆதிக்க சாதி யினர் பட்டியல்இன மக்க ளின் வழிபாட்டு உரிமையை தடுத்துவிட்டனர். இந்நிலையில் இந்த ஆண்டு மாரியம்மன் கோயில் திருவிழா தற்போது நடைபெற்று வரு கிறது. தற்போது பட்டி யல் இன மக்கள் ஒன்று சேர்ந்து தாங்கள் இழந்த வழி பாட்டு உரி மையை மீண்டும் கிடைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்து சமய அறநிலையத்துறை துணை ஆய்வாளரிடமும், கடந்த மாதம் 26ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்திருந்தனர். இதையடுத்து செவ்வா யன்று (ஜன. 24) கோட்டாட் சியர் மந்தாகினி தலை மையில் தென்முடியனூர் கிராமத்தின் இருதரப்பு மக்க ளிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அதில் திரு விழவின் இறுதி நாளான ஜனவரி 30ஆம் தேதி, பட்டியலின மக்கள் திரு விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்யலாம் என இரு தரப்பினர் மத்தியில் தெரிவித்தார். இந்நிலையில் புதனன்று (ஜன. 25) தென்முடியனூர் கிராம கோவில் திருவிழா வில் அனைத்து மக்கள் பங்கேற்பது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளிக்கப் பட்டது.   அதில், ஒவ்வொரு ஆண்டும் இக்கோயில் திருவிழா சமூக ரீதியாக ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு 13 நாட்கள் நடைபெறுகிறது. கோயில் நிர்வாகத்தில் அறநிலையத்துறை உறுப்பினராக பட்டியலின மக்கள் இருந்துள்ளனர். எனவே கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில், மேற்படி கிராமத்தில் மக்கள் ஒற்று மையை நிலைநிறுத்த பட்டியலின உழைக்கும் மக்களின் ஆலய வழிபாட்டு உரிமையை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், எஸ்.ராமதாஸ், தண்டராம்பட்டு வட்டாரச் செயலாளர் அண்ணா மலை, தென்முடியனூர் குபேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.