திருவண்ணாமலை, ஜூலை 21- திருவண்ணாமலை ஒன்றியம் பாப்பம்பாடி மாதா கோவில் பகுதியில் கிறிஸ்தவ அருந்ததியர் மக்க ளுக்கும், தலித் இந்துக்க ளுக்கும் இடையே சிறு வர்கள் விளையாட்டு தொடர் பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு குறித்து தச்சம்பட்டு காவல் நிலை யத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் புதனன்று (ஜூலை 20) மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. தலித் இந்துக்கள் அடி யாட்களுடன் சென்று மாதா கோவில் மற்றும் அருந்த திய மக்களின் வீடு கள், கடைகள் அனைத்தை யும் அடித்து நொறுக்கி கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அருந்ததிய மக்கள் திருக் கோயிலூர் சாலையில் மறிய லில் ஈடுபட்டனர். பாதிக்கப் பட்ட மக்களுக்கு ஆதர வாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றி யச் செயலாளர் எஸ்.ராமதாஸ், நிர்வாகிகள் லூர்துமேரி, ஜெயராணி, மேரி, பாண்டுரங்கன், அருந்ததியர் மக்கள் அமைப்பு நிர்வாகி அருள்செல்வன் ஆகியோர் குரல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவண்ணாமலை வட்டாட்சியர், காவல் துறை அதிகாரிகள் மறிய லில் ஈடுபட்டவர் களிடம் சமா தான பேச்சு நடத்தினர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப் பட்டது. இதுகுறித்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ப.செல்வன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த பகுதி யில் தகராறு துவங்கிய போது, தச்சம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. அதன் காரண மாகவே மீண்டும் மத மோதல் உருவாகியுள்ளது. குற்றவாளிகள் மீது காவல்துறை உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும், கலவரத்தில் சேதமடைந்த பொருட்களுக்கு வருவாய்த் துறை நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார். இந்த கலவரத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருப வர்களை சிபிஎம் திரு வண்ணாமலை நகரச் செயலாளர் எம்.பிரகல நாதன், ஒன்றியச் செய லாளர் எஸ்.ராமதாஸ் ஆகி யோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.