districts

img

பூங்கா, உடற்பயிற்சி நிலையத்தை திறக்க வாலிபர் சங்கம் கோரிக்கை

திருப்பூர், டிச.11- தமிழக அரசு விளையாட்டு பூங்கா மற்றும் உடற்பயிற்சி நிலையங்களை திறக்கச் அனுமதியளித்து அக்டோபர் மாதம் அரசாணை வெளியிட்டும், ஆத்துப்பாளையம் எல்லைக்குட்பட்ட கூட்டுறவு நகரில் உள்ள ஊராட்சி பூங்கா மற்றும் உடற்பயிற்சி நிலையம் இதுவரை திறக்கப்பட வில்லை. ஆகவே பூங்கா மற்றும் உடற்பயிற்சி நிலையத்தை பொதுப்பயன்பாட்டுக்கு திறந்து பராமரிக்கக்கோரி, பொங்குபாளையம் ஊராட்சி மன்ற செயலாளரிடம் ஆத்துப் பாளையம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதில், மாவட்டகுழு உறுப்பினர் சந்தோஷ், வடக்கு ஒன்றியத் தலைவர் சதீஸ், கிளைத்தலைவர் பாலாஜி, விவசாய சங்க ஒன்றியச்செயலாளர் அப்புசாமி மற்றும் கோபி, கோபிநாத், மணிகண்டன், விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;