திருப்பூர், ஏப்.2 - இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக உடன்பாடு கண்டிருப்பது திருப்பூர் பின்ன லாடை ஏற்றுமதியை இரட்டிப்பாக்க உதவும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் வர வேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, திருப்பூர் ஏற்றுமதி யாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் சனியன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய - ஆஸ்திரேலிய பொருளாதார கூட்டு றவு மற்றும் வர்த்தக உடன்படிக்கை (இன் ட்ஆஸ் ஏக்டா) இன்று (ஏப்.2) ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. இது ஏற்றுமதியாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும். 2030ஆம் ஆண்டு இந்தியாவின் மொத்த ஏற்றுமதி வர்த்தகத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்துவதற்கு உதவும். இந்தியாவில் இருந்து ஆஸ்திரே லியாவுக்கு மொத்த பின்னலாடை ஏற்று மதி கடந்த நிதியாண்டில் ரூ.925 கோடியாக (2 சதவிகிதம்) இருந்தது. இந்த உடன்பாட் டின் மூலம் இந்த ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, திருப்பூர் மையத்திலிருந்து கடந்த நிதியாண்டில் ரூ.630 கோடிக்கு ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி நடைபெற் ்றுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இதன் அளவு இரட்டிப்பாகும். அதற்கு இந்த உடன்பாடு புதிய வாய்ப்பை ஏற்படுத்தி உள் ளது. இதை பயன்படுத்திக் கொள்வோம் என்று ராஜா எம்.சண்முகம் தெரிவித்துள் ளார்.