districts

img

மாநில அளவில் வெற்றி பெற்ற அரசுப்பள்ளி

தாராபுரம், ஜூன் 16 – தாராபுரம் அருகே உள்ள நரசிங்காபுரம் ஊராட்சி ஒன் றிய பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றதையடுத்து வங்கி அதிகாரிகள் பரிசு வழங்கி, பாராட்டு தெரி வித்தனர். தாராபுரம் அருகே உள்ள நரசிங்காபுரம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பயிலும் மாணவர்கள் மாவட்ட அளவி லும், மாநில அளவிலும் கட்டுரைப் போட்டியில் சாதித்து வருகின்றனர். இந்நிலையில், மாணவி ந.கோமதி, ஆ.பசுபதி ஆகியோர் மாநில அளவி லும், மாவட்ட அளவிலும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு சாதித் தனர். போட்டிகளில் வெற்றி பெற்று பள் ளிக்கு பெருமை சேர்த்த ந.கோமதி, ஆ.பசுபதி ஆகியோருக்கு தளவாய்ப் பட்டணம் பஞ்சாப்  நேஷனல் வங்கி யின் கிளை மேலாளர் லித்தில் குமார் துணை மேலாளர் சுரேஷ் ஆகியோர்  மாணவர்களை ஊக்குவிக்கும் வகை யில் பரிசுகள் வழங்கி பாராட்டினார் கள். உடன் பள்ளியின் தலைமை ஆசிரியர் குருசாமி, பொறுப்பாசிரியர் சு.ஜெயலட்சுமி இருந்தனர்.