திருப்பூர், ஜூலை 14- தீத்தாம்பாளையத்தில் பொது சமுதாய நலக்கூடம் கட்டித்தர வலியுறுத்தி திருப்பூரில் மார்க்சிஸ்ட் கட்சியினர் கையெழுத்து இயக் கத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் நகராட்சி, 19 ஆவது வார்டுக்குட்பட்டது தீக் தாம்பாளையம். இங்குள்ள காமாட்சியம்மன் கோவில் அருகில் ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கட்சியினர் நடத்திய கையெழுத்து இயக் கத்தை வெள்ளக்கோவில் நகராட்சி மார்க் சிஸ்ட் கட்சி கவுன்சிலர் ராதாமணி தொடக்கி வைத்தார். சிவநாதபுரம் கட்சி கிளைச் செய லாளர் வி. லோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்க ராஜ், தாலுகாச் செயலாளர் கே. திருவேங்க டசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் துணைத்தலைவர் பி.செல்ல முத்து, தாலுகாக்குழு உறுப்பினர் எஸ்.ராதா கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.
தீத்தம்பாளையம், சிவநாதபுரம், பரப்பு மேடு, அகலரைப்பாளையம் புதூர், சேரன் நகர் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் பட்டி யலின மற்றும் பிற்படுத்தப்பட்ட உழைப் பாளி மக்கள் வாழ்கின்றனர். இவர்களின் குடும்ப விசேஷங்கள் நடத்துவதற்கு பொது சமுதாய நலக்கூடம் இல்லாமல் சிரமப்படு கின்றனர். எனவே, வெள்ளக்கோவில் நக ராட்சி நிர்வாகம் இந்த மக்களின் தேவைக் காக இப்பகுதியில் உடனடியாக பொது சமு தாய நலக்கூடம் கட்டித் தர வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினர். பொதுமக்கள் இக்கோரிக்கை யின் நியாயத்தை உணர்ந்து ஆர்வத்துடன் கையெழுத்திட்டனர்.