அவிநாசி, மே 2- பெருமாநல்லூர் அருகே 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதிய வர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பெருமாநல்லூர் அருகே வள்ளிபுரம் தட்டான்குட்டை பசுமை நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (52), பனியன் தொழிலாளியான இவர், அதே பகுதியில் விளையாடிக் கொண்டி ருந்த 5, 7 வயதுள்ள சகோத ரிகள் மற்றும் 10 வயதுள்ள சிறுமி ஆகியோரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமிகளின் பெற் றோர்கள் அளித்த புகா ரின் பேரில், அவிநாசி அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத் தின் கீழ் வழக்குப்புதிவு செய்து கணேசனை ஞாயி றன்று இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.