அவிநாசியில் பைனான்சியர் கொலையில் ஏழு பேர் கைது
திருப்பூர், டிச. 5 - அவிநாசியில் நடைபயிற்சி சென்ற பைனான்சியரை வெட் டிப் படுகொலை செய்த வழக்கில் கூலிப்படையினர் 5 பேர் மற்றும் அவர்களை ஏவிய இருவர் என மொத்தம் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவிநாசி மங்கலம் ரோடு தாமரை கார்டன் பகுதியில் வசித்து வந்தவர் ரமேஷ் (48). கடந்த 1ஆம் தேதி ஞாயி றன்று நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது அவிநாசி சேலம் நான்கு வழிச் சாலையில் காலை 6.30 மணியளவில் ஒரு கும்பல் அவரை வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.
இது தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த ஜெயபி ரகாஷ் (45), கருவம்பாளையம் கேவிஆர் நகரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (35), மன்னார்குடியைச் சேர்ந்த அஜீத் (27), சரண் (24) மற்றும் சிம்பஸ் (23) ஆகிய ஐந்து பேரை காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அவிநாசி காசிக் கவுண்டன் புதூரைச் சேர்ந்த இர்பான் (28), செம்பி யநல்லூர் வெள்ளியம்பாளையத்தைச் சேர்ந்த ஜானகிராமன் (27) ஆகியோர் ரூ.8.50 லட்சம் பணம் கொடுத்து ரமேஷை கொலை செய்யச் சொன்னதாகத் தெரிவித்துள்ளனர். அவர்கள் இருவரையும் வியாழக்கிழமை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு
திருப்பூரில் இருந்து நிவாரணப் பொருட்கள்
திருப்பூர், டிச.5- திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புயல், வெள்ள நிவாரணப் பொருட்களை விழுப்புரம் மாவட்டத்திற்கு கொண்டு செல்லும் வாகனங்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் புதனன்று காங் கேயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கொடிய சைத்து அனுப்பி வைத்தார்.
தமிழ்நாட்டில் ஃபெஞ்சால் புயல் காரணமாக அதிக மழைப் பொழிவு ஏற்பட்டு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிக கடுமையான அளவில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிட வும் அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரு கிறது.
அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார் பில் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவார ணப்பொருட்கள் வழங்கும் வகையில், 3 வாகனங்களில் 5 கிலோ அரிசி பைகள், சர்க்கரை 1 கிலோ, பருப்பு 500 கிராம், ரவை 500 கிராம், கோதுமை 500 கிராம், மஞ்சள் தூள் 100 கிராம், மிளகாய் பொடி 100 கிராம், சாம்பார் பொடி 100 கிராம், ரசப் பொடி 100 கிராம், டீ தூள் 100 கிராம் 1 வாகனத்திற்கு 500 பெட்டி கள் என 3 வாகனத்தில் 1,500 பெட்டிகள் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு, புதனன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய் தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் காங்கேயம் வட்டாட் சியர் அலுவலக வளாகத்தில் இருந்து கொடி அசைத்து விழுப் புரம் மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தார்.