திருப்பூர், டிச.10- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் திங்களன்று குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
இதில், கைத்தறி நெசவாளர்கள் குடும்பங்கள் சார்பில் கம்யூனிஸ்ட் மணி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் திருமலை நகர், நெசவாளர் காலனி பகுதியில் வசித்து வரும் 218 நபர்களுக்கு உயர்நீதிமன்ற உத்தர வுப்படி கடந்த 2019 ஆம் ஆண்டு அன் றைய மாவட்ட ஆட்சியர் இடம் வழங்க (ந.க.8687/2016/க4 என்ற எண்ணில்) மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலருக்கு செயல்முறைகள் உத்த ரவு பிறப்பித்தார். இதில் 18 நபர்களுக்கு மட்டும் பட்டா வழங்கப்பட்டது. இதைய டுத்து தொடர்ந்து மனு அளித்ததன் விளைவாக கடந்த 2024 செப்.2ஆம் தேதி காங்கேயம் தனி வட்டாட்சியர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவலகத்திற்கு (நக. 3297/2009/க4 என்ற எண்ணில்) 55 பேருக்கு பட்டா வழங்க கடிதம் அனுப்பி யுள்ளார். அதன் அடிப்படையில் கடந்த 2024 நவ.11ஆம் தேதி 6 நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. மீதம் உள்ளவர் களுக்கு எல்லா தகுதியும் இருந்தும் கார ணமின்றி பட்டா வழங்குவதில் காலதா மதம் செய்யப்படுகிறது. எனவே மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பிறப் பித்த செயல்முறை உத்தரவில் கண் டுள்ள 55 நபர்கள் அடங்கிய பட்டியலில் 49 நபர்களுக்கு உடனே பட்டா வழங்க வேண்டும். மேலும் உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியரின் செயல்மு றைகள் உத்தரவுப்படி மீதமுள்ள 155 நபர்களுக்கு விரைவில் பட்டா வழங்க ஆவணம் செய்ய வேண்டும் என கூறப் பட்டுள்ளது.
வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குக:
திருப்பூர் மாநகராட்சி 2 ஆவது வார்டு பாண்டியன் நகரில் கடந்த அக்.8 ஆம் தேதி கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும்போது வெடி விபத்து ஏற்பட்டது. அதில், வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த 2 கூலி தொழிலாளர்கள், அக்கம்பக் கத்தில் குடியிருந்தவர்களில் ஆறு மாத குழந்தை மற்றும் ஆறு வயது குழந்தை கள் பலியாகின. மேலும், சுற்றி இருந்த வீடுகள், மளிகை கடை உள்ளிட்டவை கள் சேதம் அடைந்தன. இதனால் பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து கடும் நெருக்கடிக்கு உள்ளாகினர். இது தொடர்பாக ஐக்கிய முஸ்லிம் முன் னேற்றக் கழகத்தினர் ஆட்சியரைச் சந் தித்தபோது, இன்னும் 5 நாட்களில் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்ப தாக கூறப்பட்டது. ஆனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நிவாரண மும் கிடைக்கவில்லை. எனவே அதிகாரி கள் உடனே ஆய்வு செய்து அவர்க ளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப் பட்டவர்களுடன், ஐக்கிய முஸ்லிம் முன் னேற்ற கழகத்தினர் மனு அளித்தனர்.
உப்பாறு அணைக்கு உயிர் தண்ணீர்:
கடந்த ஆறு மாதங்களாக தாராபுரம் உப்பாறு அணைக்கு உயிர் தண்ணீர் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தும், பிஏபி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தண்ணீர் தர வாய் மொழி உத்தரவு தந்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள் ளனர். விவசாயிகள் மற்றும் பொது மக்க ளின் நலனை கருத்தில் கொண்டு உப் பாறு அணைக்கு உயிர் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமி ழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தி னர் கோரிக்கை வைத்தனர்.
அதேபோல் பல்லடம் சுற்றுவட் டாரப் பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் வீட்டுமனை பட்டா கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தனர்.
மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத் தில், மாவட்ட வருவாய் அலுவலர் க. கார்த்திகேயன், திட்ட இயக்குநர் (மக ளிர் திட்டம்) சாம்சாந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.