districts

img

மாதர் சங்கத்தினர் கிறிஸ்துமஸ் வாழ்த்து

திருப்பூர், டிச. 26 - கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட் டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் குழந் தைகள், பெண்கள் உள்ளிட்ட கிறிஸ்தவர்களுக்கு இனிப்பு  வழங்கி, கிறிஸ்துமஸ் வாழ்த்து பரிமாறினர். ஊத்துக்குளி ஆர்.எஸ். தேவாலயத்தில் மாவட்ட செயலா ளர் சரஸ்வதி தலைமையிலும், அவிநாசி கமிட்டி சின்ன கரு ணைபாளையம் சர்ச்சில் மாவட்ட துணை செயலாளர் செல்வி  தலைமையிலும், மாவட்டக்குழு உறுப்பினர் கேத்தரின் இல் லத்தில் மாவட்ட துணைத்தலைவர் பானுமதி தலைமையி லும், வேலம்பாளையம் சர்ச்சில்  தலைவர் அழகு தலைமையி லும், ரங்கநாதபுரம் சர்ச்சில் மாவட்டக்குழு உறுப்பினர் செல்வி  தலைமையிலும், அனுப்பர்பாளையம் திலகர்நகர்  சர்ச்சில்  வேலம்பாளையம் கமிட்டி பொருளாளர் சாந்தி தலைமையி லும், இடுவாய் சர்ச்சில் முன்னாள் மாவட்ட தலைவர் அங்கு லட்சுமி தலைமையிலும், குமார்நகர் பிஷப் சர்ச்சில் மாவட்டக் குழு உறுப்பினர் அம்சவல்லி தலைமையிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பெண்கள், குழந்தைகள் உள் ளிட்ட கிறிஸ்தவர்களுக்கு இனிப்பு வழங்கி, வாழ்த்து தெரி விக்கப்பட்டது. மாதர் சங்க நிர்வாகிகள் உள்பட ஏராள மானோர் இதில் கலந்து கொண்டனர்.