districts

சமுதாயக் கூடத்திற்கு காவலாளி நியமித்த விவகாரம்: நடவடிக்கை எடுக்க சிபிஎம் கோரிக்கை

அவிநாசி, ஜூலை 18 - அவிநாசி அருகே வஞ்சிபாளையத்தை அடுத்த பொன்ராமபுரத்தில் சமுதாய நலக்கூ டத்திற்கு காவலாளி நியமித்ததாக மாதந் தோறும் ரூ.9300 வீதம் ஊராட்சி நிர்வாகம்  எடுத்து வருவது குறித்து விசாரித்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின்  பொன்ராமபுரம் கிளை சார்பில் அவிநாசி  ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் வியாழக்கி ழமை புகார் மனு அளித்தனர். இதில்,  புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட,  பொன்ராமபுரத்தில் 200க்கும் மேற்பட்ட அருந் ததியர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  இப்பகுதியில் அடிப்படை வசதிகளான  கான்கிரீட் சாலை, வடிகால் வசதி உள்ளிட்ட வைகள் செய்து தர வேண்டும். மேலும்  இப்பகுதியில் அமைந்துள்ள சமுதாய நலக்  கூடத்திற்கு, கழிப்பறை வசதிகள் கூட இல்லை. ஆனால் 2022ஆம் ஆண்டு முதல்  சமுதாய நலக்கூடத்திற்கு காவலாளி நிய மித்த வகையில் என்று மாதம் ரூ.9300 ஊராட்சி  நிர்வாகம்  பணம் எடுத்து வருவதாக தெரிகி றது. எனவே இது குறித்து விசாரித்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

மேலும் நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில்,  ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்பு  ஊராட்சிமன்றத் தலைவர் எங்கள் ஊராட்சி பகுதிகளுக்கு ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் 1100 தண்ணீர் இணைப்பு கொடுத்ததாக கூறி யிருக்கிறார். ஆனால் ஜல்ஜீவன் திட்டத்தில் இப்படி ஒரு பயன்பாடு நடைபெறவில்லை எனவும் அப்பகுதி மக்கள் கூறினர்.

இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் விசாரிப்பதாகவும், அதேபோல காவ லாளி நியமிப்பது குறித்து ஆடிட்டிங் கணக்கு  பார்க்கும்போது தெரியவரும். இது குறித்து  விசாரிப்பதாக ஒன்றிய ஆணையர் தெரிவித் தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.பழனிசாமி, ஊராட்சிமன்ற உறுப்பினர் குமரவேல், கிளைச் செயலாளர் ராமகிருஷ்ணன், துரை சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.