திருப்பூர், ஜூலை 25 – தமிழக அரசு உயர்த்தியுள்ள மின் கட்டணம் ஏழை, எளிய சாமானிய மக்களுக்கும், சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையினருக்கும் கூடுதல் சுமையாக இருக்கும் என்பதால் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் வடக்கு மாநகரக்குழு சார்பில் சாமுண்டிபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ராஜீவ் நகர் கிளைச் செயலாளர் விஜய் தலைமை ஏற்றார். கட்சி யின் வடக்கு மாநகரச் செயலாளர் பி.ஆர்.கணே சன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.மைதிலி, மாநகரக்குழு உறுப்பினர்கள் ஆர்.நந்தகோ பால், பா.ராஜேஷ் ஆகியோர் கோரிக்கை குறித்து உரையாற்றினர். இதில் கமிட்டி உறுப்பி னர்கள் எஸ்.ராஜேந்திரன், பொன்.பாலகுமார், துரை.சம்பத், ராம் ஆனந்த் உள்பட திரளா னோர் கலந்து கொண்டனர். நிறைவாக மனோஜ் நன்றி கூறினார்.
வடக்கு ஒன்றியம்
திருப்பூர் வடக்கு ஒன்றியக்குழு சார்பில் போயம்பாளையம் பிரிவு சக்தி நகரில் நடை பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியக் குழு உறுப்பினர் பாண்டியன் தலைமை ஏற்றார். இதில் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண் ணன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆ.சிகாமணி, முன்னாள் ஒன்றியச் செயலாளர் கே.பழனி சாமி உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் பி.கே.கருப்புசாமி, பி.மகாலிங்கம், என்.கோபால், எம்.தன்ராஜ், எஸ்.அழகு, ஏ.சந்தோஷ்குமார், கிளைச் செயலா ளர்கள் உள்பட கட்சி அணியினர் திரளானோர் கலந்து கொண்டனர். ஒன்றியக்குழு உறுப்பினர் இளங்கோ நன்றி கூறினார்.
தெற்கு ஒன்றியம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றியக்குழு சார்பில் நல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே மின் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தெற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் பா.லட் சுமி, வாலிபர் சங்கச் செயலாளர் ஜி.சிந்தன் உள் ளிட்டோர் உரையாற்றினர். இதில் கட்சி ஒன்றி யக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
வேலம்பாளையம்
மார்க்சிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரக்குழு சார்பில் வியாழன்னறு அனுப்பர் பாளையம் ஆத்துப்பளையம் சாலையில் மின் கட்டண உயர்வுக்கு எதிராகவும், ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் மக்களுக்கு விரோத மாகவும், தமிழ்நாட்டைப் புறக்கணித்ததாகவும் இருப்பதைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
அனுப்பர்பாளையம் கிளைச்செயலாளர் ஏ.முத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற போ ராட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், நகரச் செயலாளர் ச.நந்தகோ பால், நகரக்குழு உறுப்பினர் அ.ஆறுமுகம் ஆகி யோர் விளக்கிப் பேசினர். இதில், நகரக்குழு உறுப்பினர்கள் ர.கவிதா, த.நாகராஜன், ஆர்.சுகு மார், பி.நவபாலன், பி.ரகுபதி உள்ளிட்ட கிளைச் செயலாளர்கள், கட்சி அணியினர் திரளாகப் பங் கேற்றனர். முடிவில், நகரக்குழு உறுப்பினர் அ.உமாநாத் நன்றி கூறினார்.
அவிநாசி
அவிநாசி ஒன்றியக்குழு சார்பில் வஞ்சிபா ளையத்தில் வியாழனன்று நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பி னர் கே முருகன் தலைமையேற்று நடத்தினார். இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கே.பால சுப்பிரமணியம் கிளைச் செயலாளர்கள் ராமகி ருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐ டியு மாநிலச் செயலாளர் எம்.சந்திரன் ஒன்றியக் கவுன்சிலர் பி.முத்துசாமி, ஒன்றியச் செயலாளர் ஆர்.ஈஸ்வரமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.பழனிச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் மோகனசுந்தரம் ஆகியோர் உரையாற்றினர். மேலும் எம் ராஜா நன்றி கூறி நிறைவு செய்தார். திரளானோர் கலந்து கொண்டனர்.
பல்லடம்
தமிழக அரசின் மின்கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரியும், ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தி இருக்கும் மூன்று குற்ற வியல் சட்டங்களை ரத்து செய்ய வலியு றுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன்றியக்குழு சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் வியாழக்கிழமை பல்லடம் கொசவம்பா ளையம் ரோட்டில் ஒன்றியக்குழு உறுப்பினர் வை.பழனிசாமி தலைமையில் நடைபெற் றது. கோரிக்கைகளை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பி னர் வை.ஆனந்தன், ஒன்றியச்செயலாளர் ஆர்.பரமசிவம் ஆகியோர் உரையாற்றினர். ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் பி.ஆர்.ராஜேந்திரன், முருகேசன், மோகன் உள்பட திரளானோர் பங் கேற்றனர்.
ஊத்துக்குளி
மின் கட்டண உயர்வைக் கண்டித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி ஒன்றி யக்குழு சார்பில் ஊத்துக்குளி இரயிலடி பேருந்து நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கு.சரஸ்வதி, தாலுகாச் செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி, தாலுகாக்குழு உறுப்பினர்கள் கை.குழந்தை சாமி, ஆர்.மணியன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டனம் முழங்கினர்.
உடுமலை
மின் கட்டண உயர்வுக்கு எதிராக வியாழக் கிழமை உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் உடுமலை நகரச் செய லாளர் தண்டபாணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.ஆர்.மதுசூதனன், நகரக் குழு உறுப்பினர் வே.விஸ்வநாதன், தோழன் ராஜா உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் நக ரக்குழு உறுப்பினர்கள் வே.விஸ்வநாதன், வசந்தி, சித்ரா உள்பட நூற்றுக்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வுக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர்.
மடத்துக்குளம்
மடத்துக்குளம் நால் ரோடு பகுதியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலூகா செயலா ளர் ஆர்.வி. வடிவேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தாலூகாக்குழு உறுப்பினர்கள் எம்.எம்.வீரப்பன், பன்னீர்செல் வம், ராஜரத்தினம், வேடபட்டி ஈஸ்வரன், ராஜகோ பால் மற்றும் ஈஸ்வரன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டார்கள்.
காங்கேயம்
மார்க்சிஸ்ட் கட்சியின் காங்கேயம் தாலுகா குழு சார்பில் காங்கேயம் நகர பேருந்து நிலையத் தில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் தாலுகா குழு உறுப் பினர் எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர் வை ரத்து செய்ய வலியுறுத்தி தாலுகா குழு உறுப்பினர்கள் பி.வேலுச்சாமி, எஸ்.தங்கவேல், தாலுகா செயலாளர் கே.திருவேங்கடசாமி, நக ரக் கிளைச் செயலாளர் ஜெ.ராமநாதன் ஆகி யோர் உரையாற்றினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர். போக்குவரத்து அரங்கக் கிளைச் செயலாளர் ஆர்.வின்சென்ட் நன்றி கூறி னார்.