districts

img

பட்ஜெட் தாக்கல் செய்யாமலேயே தீர்மானம் நிறைவேற்ற முயற்சி திருமுருகன் பூண்டி நகராட்சியில் கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு

2024 - - 25ஆம் நிதியாண்டிற்கான  வரவு செலவு அறிக்கையை நகர்மன் றத்தில் தாக்கல் செய்யாமலேயே அது குறித்து தீர்மானம் நிறைவேற்ற  திருமுருகன்பூண்டி நகராட்சி நிர்வா கம் முயற்சி மேற்கொண்டது. மார்க்சிஸ்ட் கட்சி, திமுக உள்ளிட்ட கட்சி நகர்மன்ற உறுப்பினர்களின் கடு மையான விமர்சனத்திற்குப் பிறகு, இம்முயற்சி கைவிடப்பட்டது. மேலும், தனியாக நகர்மன்றக் கூட்டம்  நடத்தி வரவு செலவு அறிக்கை தாக் கல் செய்ய நிர்வாகம் ஒப்புக் கொண் டது.

திருமுருகன்பூண்டி நகரமன்ற கூட்டம் வெள்ளியன்று நகரமன்ற தலைவர் குமார் தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நகரமன்ற உறுப்பினர்கள் சுப் பிரமணியம், தேவராஜன் ஆகியோர்  பேசுகையில், நகரமன்ற கூட்டத் திற்கு புதன்கிழமை இரவு தான் சுற்ற றிக்கை வந்துள்ளது. சுற்றறிக்கையை  பார்க்கும்போது 86 அஜெண்டாக் கள் அவசரக்கூட்டம் என  பதிவு செய் யப்பட்டுள்ளது. அவசரக்கூட்டத்தில் இரண்டு, மூன்று அஜெண்டாக் கள்தான் முன்வைத்து பேசப்படும். ஆனால் அவசரக் கூட்டம் என்ற பெய ரில் சாதாரணக் கூட்டம் நடத்தியுள் ளீர்கள்.

அதேபோல 2024-25 ஆம் ஆண் டிற்கு உண்டான வரவு செலவு அறிக்கை முன்வைக்கப்பட்டது என்று அச்சிடப்பட்டு, அதற்கான அறிக்கை வைக்கவில்லை. இந்த முழு வரவு செலவு அறிக்கை வைத்த  பின்பே இக்கூட்டத்தை நடத்த வேண் டும் என்று வலியுறுத்தினர்.

திமுகவைச் சேர்ந்த பாரதி, அதிமு கவை சேர்ந்த லதா ஆகியோரும் இக்  கோரிக்கையை வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இக் கூட்டத்தை தள்ளி வைத்து தனியாக  நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி னர்.

ஆனால் இதற்கு பதிலளித்த நக ராட்சி ஆணையர், நாடாளுமன்ற தேர் தல் தேதி அறிவித்தால் எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ள முடி யாது என்பதாலும், பலரது கோரிக்கை விடுபட்டுப் போய்விடும் என்பதாலும் தான் அவசரக் கூட்டத் தில் இந்த அஜெண்டா முன்வைக்கப் பட்டது என்றார். 

வரவு செலவு அறிக்கை தொழில் நுட்பக் கோளாறு போன்ற பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி அதிகா ரிகள் பதில் தெரிவித்தனர்.

எனினும் இதை ஏற்க மறுத்த மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கள், திமுகவின் பாரதி, அதிமுகவின்  லதா ஆகியோர் வரவு செலவு அறிக் கையை தாக்கல் செய்ய வேண்டும் என உறுதியாக வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து வரவு செலவு குறித்த அஜண்டா வேறொரு நாள் தாக்கல் செய்யப்படும் என்று தெரி விக்கப்பட்டது. அதிகாரிகள் வரவு செலவு அறிக்கையைத் தாக்கல் செய் யாமலேயே மன்றத்தில் பதிவு செய் வது சரியல்ல என்று கூறிய நகர் மன்றத் தலைவர், இதனால் தனக்கும்  அவப்பெயர் ஏற்படும் என்று கூறி னார்.

லஞ்சம் வாங்கிய அதிகாரி
இதைத் தொடர்ந்து வரவு செலவு குறித்த அஜண்டா வேறொரு நாள் தாக்கல் செய்யப்படும் என்று தெரி விக்கப்பட்டது. அதிகாரிகள் வரவு செலவு அறிக்கையைத் தாக்கல் செய் யாமலேயே மன்றத்தில் பதிவு செய் வது சரியல்ல என்று கூறிய நகர் மன்றத் தலைவர், இதனால் தனக்கும்  அவப்பெயர் ஏற்படும் என்று கூறி னார்.

இந்த நிலையில் திமுக நகரமன்ற  உறுப்பினர் பாரதி, சுகாதார அலுவ லர்கள் மளிகைகடை உரிமம் புதுப் பிக்க ரூ.5,000 கையூட்டு கேட்டதாக குற்றம் சாட்டினார். இதற்கு சுகாதார  அலுவலர்கள் மறுப்பு தெரிவி்த்து, ஆதாரம் உள்ளனவா என கேட்ட னர்.