districts

img

உடுமலையில் சிஐடியு பஞ்சாலை சங்க மாவட்ட மகாசபை

திருப்பூர், ஜூலை 14 - உடுமலைபேட்டை சிஐடியு அலுவலகத் தில் புதன்கிழமை திருப்பூர் மாவட்ட பஞ்சா லைத் தொழிலாளர் சங்கத்தின்தலைமை  மகாசபை நடைபெற்றது. அதில் 50.க்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஜி.சம் பத், பஞ்சாலை சங்க மாவட்ட தலைவர் என். கிருஷ்ணசாமி, பொதுச்செயலாளர் சி.ஈஸ்வ ரமூர்த்தி, பொருளாளர் கே.பழனிச்சாமி உள் ளிட்ட நிர்வாகிகள் நிர்வாக கமிட்டி உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். வேலை அறிக்கை, வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது, பின் னர் புதிய நிர்வாகிகள், கமிட்டி  உறுப்பினர்கள் தேர்வு செய் யப்பட்டனர்.

புதிய நிர்வாகிகள் விபரம்:தலைவர் கே.பழனிச்சாமி, துணைத்  தலைவர் ஏ.சண்முகம், பொதுச்செயலாளர் சி.ஈஸ்வரமூர்த்தி, செயலாளர் எம்.செல்வ ராஜ், பொருளாளர் எஸ்.ஜெயபிரகாஷ் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகக் குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட னர். நிறைவாக எம்.செல்வராஜ் நன்றி கூறி னார்.