districts

காங்கேயம் அமைச்சர் அலுவலகத்தில் சிஐடியு நிர்வாகிகள் கோரிக்கை மனு அளிப்பு

திருப்பூர், டிச. 7 - தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற் றோரின் நீண்ட காலமாக தீர்க்கப்படாத கோரிக்கைகள் குறித்து வரும் சட்ட மன்றக் கூட்டத் தொடரில் பேச வேண் டும் எனக் கோரி அமைச்சர் மு.பெ.சாமி நாதனின் காங்கேயம் அலுவலகத்தில் சிஐடியு நிர்வாகிகள் மனு அளித்தனர்.

காங்கேயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க சிஐடியு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் முடிவு செய்தனர். அதன்படி சனியன்று  காங்கேயத்தில் அவரது அலுவலகத் துக்குச் சென்றபோது, அவர் வெளியூர்  சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த காங்கேயம் திமுக நகரச் செயலாளர் வசந்தம் ந. சேமலையப்பனிடம் சிஐடியுவினர் கோரிக்கை மனுவை அளித்தனர்.

இதில் சிஐடியு காங்கேயம் அரசுப்  போக்குவரத்து ஊழியர் சங்க கிளைத் தலைவர் விஸ்வநாதன், செயலாளர் சுரேஷ், துணைத் தலைவர் காளிராஜ்,  பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகரன்,  ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தலை வர் முத்தப்பன், அதன் பொருளாளர் வடி வேல், ஓய்வு பெற்றோர் நல அமைப் பைச் சேர்ந்த அர்ச்சுனன், நடராஜ் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். மார்க் சிஸ்ட் கட்சியின் காங்கேயம் தாலுகா குழு உறுப்பினர் இரா.செல்வராஜ் உட னிருந்தார். இவர்கள் அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது, வரும் திங்களன்று தமிழ் நாடு சட்டமன்ற பேரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக சேவை  காரணமாக, தமிழகத்தில் கல்வி, பொரு ளாதாரம், சமூக முன்னேற்றத்தில் மிகப் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே  போக்குவரத்துக் கழகத்திற்கு நிதி இழப்பை ஈடுகட்ட அரசு வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும் என  சிஐடியு கோரி வருகிறது. ஆனால்  இதுவரை எவ்வித இழப்பீடும் வழங்கப் படவில்லை. போக்குவரத்து ஊழியர் கள் மற்றும் ஓய்வு பெற்றோரின் பணப் பலன் நிலுவை உள்ளிட்ட கோரிக்கை களை நிறைவேற்ற வேண்டும் என்று கோரினர்.