districts

நெல்லையை குளுமையாக்கிய கோடை மழை

திருநெல்வேலி, ஏப்.8 - நெல்லை மாவட்டத்தில் கோடை மழை  காரணமாக மாநகர பகுதியில் குளுமை யான நிலை நிலவுகிறது. நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வார மாக பரவலாக கோடை மழை பெய்து வரு கிறது. வியாழக்கிழமை மாநகர பகுதியில் மழை தணிந்து வெயில் கொளுத்திய நிலை யில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே சாரல் மழை பெய்தது.  மாநகர பகுதியில் பாளை, சமாதானபுரம், தச்சநல்லூர், வண்ணார்பேட்டை, டவுன், பேட்டை, ஆவரைகுளம், ரெட்டியார்பட்டி உள்ளிட்ட இடங்களில் வெள்ளியன்று காலை யில் வானில் கருமேகக் கூட்டங்கள் காணப்பட் டன. வழக்கத்தைவிட வானம் இருண்டு காணப் பட்டது. காலை 6 மணி முதல் சுமார் 2 மணி  நேரம் பரவலாக சாரல் மழை பெய்தது. இத னால் வாகன ஓட்டிகளும், சாலையில் நடந்து சென்றவர்களும் குடைகளை பிடித்த படி சென்றனர். மாவட்டம் முழுவதும் குளிர்ச்சி யான சூழ்நிலை நிலவியது. குற்றாலத்தில் சீசன் காலங்களில் தோன்றும் குளுகுளு கால நிலை போன்று மாநகர பகுதியில் குளுமை யான நிலை இருந்தது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பாளையில் அதிகபட்சமாக 5 மில்லிமீட்டரும், களக்காட்டில் 3.4 மில்லிமீட்டரும், நெல்லை யில் ஒரு மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. அம்பை, ராதாபுரம், முக்கூடல், சேரன் மகாதேவி பகுதிகளில்  அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.