districts

img

ஆளுமைத் திறன் வளர்ப்பில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம்

மயிலாடுதுறை, ஏப்.13- மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அரசு கலை  மற்றும் அறிவியல் கல்லூரியில் இளையோர்  செஞ் சிலுவை சங்கம் சார்பில் ஆளுமைத் திறன் வளர்ப்பில் இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின்  மேலாண்மைப் பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்விற்கு மணல்மேடு அரசுக் கல்லூரி முதல்வர் ஆர்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். நாகப்பட்டினம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.வி.பாண்டியன்  முன் னிலை வகித்தார். இளைஞர் செஞ்சிலுவை சங்க திட்ட  அலுவலர் தி.தாமரைக்கண்ணன் வரவேற்றார். கல்லூரிப் பேராசிரியர்கள் கே.தமிழ்ச்செல்வன், பி.கலைச்செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  ஆர்.சந்திரசேகரன் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.  அண்ணாமலைப் பல்கலைக்கழக மண்டல ஒருங்கி ணைப்பாளர் டி.ராஜ்பிரவீன் மாணவர் தொண்டர்களுக்கு பயிற்சியளித்தார். 200-க்கும் மேற்பட்ட மாணவர் தொண்  டர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். வி.இராம மூர்த்தி நன்றி கூறினார். இந்த நிகழ்வு பாரதிதாசன் பல்கலைக்கழக செஞ் சிலுவைச் சங்கத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் கே. வெற்றிவேல் வழிகாட்டுதலோடு நடைபெற்றது.