கோவை, மே 12- உலக செவிலியர் தினத்தை ஒட்டி, கோவை அரசு மருத் துவமனையில் செவிலியர்கள் உறுதிமொழி ஏற்றும், நடனமாடியும் கொண்டாடினர். செவிலியர்களின் முன்னோடியாக திகழ்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தநாளான மே 12ஆம் தேதி செவிலி யர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடமும் செவிலியர் தினம் அனைத்து மருத்துவமனை களிலும், செவிலியர் கல்லூரிகளிலும் கொண்டாடப்பட்டு வரு கிறது. அதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவம னையில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் செவிலியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர் பணி குறித்தான உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து செவிலியர்கள் மற்றும் மருத்து வர்கள் ஒன்றாக சினிமா பாடல்களுக்கு உற்சாகமாக நடன மாடி செவிலியர் தினத்தை கொண்டாடினர். இந்த நிகழ்வில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலாவும் கலந்து கொண்டு செவிலியர் தின வாழ்த்துக் களை தெரிவித்துக் கொண்டு, செவிலியர்களுடன் இணைந்து நடனமாடி மகிழ்ந்தார்.