districts

img

15 நாளாக குடிநீர் வழங்கவில்லை: குடங்களுடன் பெண்கள் மறியல்

புதுக்கோட்டை, மே 4 - புதுக்கோட்டை நகராட்சியில் 15 தினங் களாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து காலிக் குடங்களுடன் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை நகரின் பல்வேறு இடங்க ளில் குடிநீர் வழங்கப்படாததால் மக்கள் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், புதுக்கோட்டை அடப்பன் வயல் பகுதியில் 15 தினங்களாக குடிநீர்  வழங்கப்படவில்லை எனக்கூறி புதுக் கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அப்பகுதி பெண்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத் துக்கு வந்த நகராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், குடிநீர் கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதைத் தொ டர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.