அரியலூர், டிச.3 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் தெற்குத் தெருவில் வசித்து வருபவர் கலியமூர்த்தி (43). நெசவுத் தொழி லாளியான இவருக்கு காஞ்சனா (38) என்ற மனைவியும், திவ்யதர்ஷினி (11) என்ற மக ளும், சாய் வெங்கடேஷ் என்ற மகனும் (5) உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கலியமூர்த்திக்கு காலில் நரம்பு சுருட்டல் நோய் ஏற்பட்டது. இதனால் ஜெயங்கொண் டம் அரசு மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப் போது சிகிச்சையில் ஏற்பட்ட தவறால் அவரது ஒரு காலை மருத்துவர்கள் அகற்றினர். இதில் நிலைகுலைந்த கணவர் கலிய மூர்த்திக்கு, அவரது மனைவி காஞ்சனா உறு துணையாக இருக்கிறார். பின்னர் இருவரும் நெசவுத் தொழிலை மீண்டும் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து கலியமூர்த்தி கூறுகையில், “அப்பா காலத்தில் இருந்து நெசவுத் தொழில் தான் செய்து வருகிறோம். தற்போது ஒரு காலோடு போராடி வருகிறேன். அரசாங்கம் கொடுக்கும் உதவித்தொகையை வைத்து குடும்பத்தை நடத்த முடியவில்லை. இருப்பி னும் மனம் தளராமல் வாழ்க்கையை நகர்த்துகிறேன். ஒரு காலை இழந்து மிகுந்த சிரமத்தில் உள்ள எனக்கு, தமிழ்நாடு அர சாங்கம் மூன்று சக்கர வாகனம் கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும். மேலும் கோயில் மானிய நிலத்தில் தற்காலிகமாக குடியிருந்து வருகிறோம். அரசு சார்பில் வீட்டுமனை வழங்க வேண் டும். என்னைப் போன்ற ஊனமுற்றோருக்கு அரசு, சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவ னங்கள் உதவினால் நன்றாக இருக்கும்” என்றார் கண்ணீருடன்.