திருச்சிராப்பள்ளி, ஜூன் 12 - திருச்சி மாவட்டம் உப்பிலிய புரம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சாதாரண கூட்டம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஹேமலதா முத்துச்செல்வம் தலை மையில் நடைபெற்றது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தளுகை 1வது வார்டு உறுப்பினர் பேசுகையில், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத் தில் உள்ள பல கிராமங்களில் பெரும் பாலும் ஆதிதிராவிடர் மக்களுக் கான மயானங்கள் இல்லை அல்லது அந்த மயானத்தில் போதுமான வசதிகள் இல்லாமல் மிகவும் மோச மான நிலையில் உள்ளது. இந்த நிலை மாற, உப்பிலியபுரம் பகுதி யில் ஒரு மின் மயானம் அமைக்க வேண்டும். புளியஞ்சோலை பராமரிப்பு என்பது மாதம் ரூ.30 ஆயிரத்தை தாண்டி செல்கிறது. பூங்கா பரா மரிப்பு, பயணியர் விடுதி பரா மரிப்பு, கழிப்பறை சுத்தம் செய்தல் என்று கடந்த இரண்டரை ஆண்டு களில் ரூ.7 லட்சத்து 30 ஆயிரத் துக்கு மேல் செலவிடப்படுவதாக கணக்கு காட்டப்படுகிறது. ஆனால் அங்கு சென்று பார்த்தால் பூங்கா வும், விடுதியும் எந்தப் பராமரிப்பும் இல்லாமல் புதர் மண்டிக் கிடக்கிறது. அப்படி இருக்க இந்த செலவு தொகை மிகவும் அதிகமாக உள்ளது. புளியஞ்சோலைக்கு வரும் வாகனங்களுக்கு நுழைவு கட்ட ணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் அந்த பகுதியில் ஒரு குப்பைத் தொட்டிகூட அமைக்கப்படவில்லை. பார்க்கிங் வசதி இல்லை.
இருசக்கர வாகனங்களுக்கு கூட நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுவது சரியா னது அல்ல. எனவே இந்த கட்டண வசூலை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நூறு நாள் வேலை திட்டத் தில் 2016 முதல் 2019 வரை நடை பெற்றுள்ள நிர்வாக குளறுபடி களுக்கு பொதுமக்களை பணம் கட்டச் சொல்லி வற்புறுத்தி வரு கின்றனர். இது முழுக்க, முழுக்க நிர்வாகத்தில் இருப்பவர்களின் கவனக்குறைவும், தவறும் ஆகும். இதற்கு எந்த வகையிலும் பொது மக்கள் பொறுப்பேற்க முடியாது. எனவே பொதுமக்களிடம் ரொக்க வரி வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். நூறு நாள் வேலை திட்டத் தில் காலை 6.30 மணிக்கு பணியா ளர்களை வரவழைத்து புகைப்படம் பிடித்து வீட்டுக்கு அனுப்பி பிறகு 9 மணிக்கு வரச் சொல்லி அலைக் கழிக்கப்படுகிறார்கள். நூறு நாள் வேலையை விட்டு மக்களை விரட்டும் செயலாக இது உள்ளது. நூறு நாள் வேலை செய்யும் இடத்தில் விபத்து ஏற்படும்போது அந்த விபத்து மூடி மறைக்கப்படு கிறது. இதுமட்டுமின்றி, விபத்தில் காயமடைந்த அல்லது உடல் உறுப்பு கள் ஊனமுற்றவர்கள் மருத்துவ மனையில் மாதக்கணக்கில் உள் நோயாளியாக இருந்தவர்களுக்கு கூட எந்த இழப்பீடும் பெற்றுத் தரா தது வருத்தமளிக்கிறது. எரக்குடி ஊராட்சியில் நல்ல தண்ணீர் 10 நாட்களுக்கு ஒருமுறை யும், உப்புநீர் 5 நாட்களுக்கு ஒரு முறையும் வீடுகளுக்கு வழங்கப்படு கிறது.
இதனை முறைப்படி தினசரி சுத்தமான குடிநீர் அனைவருக்கும் கிடைக்க ஆவன செய்ய வேண்டும். தளுகை வெடிமருந்து ஆலை ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அதன்மீது நடவடிக்கை எதுவும் இது வரை எடுக்கப்படவில்லை. பலமுறை மனு கொடுத்தும் எரகுடி வடக்குப்பட்டியில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ள ஊராட் சிக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப் பட எந்த நடவடிக்கையும் இல்லை. இதன் மீது நிர்வாக நடவடிக்கை களை உடனடியாக எடுக்க வேண் டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக் கொள் கிறேன்” என்றார். பின்னர் த.மங்கப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில் தொடங்கப்பட்ட கழிப்பறைகள் இதுவரை கட்டி முடிக்கப்படாமல் இருக்கின்றன. பழைய மங்கப்பட்டி வடக்கு டிரான்ஸ்பார்மர் சாலை தரம் உயர்த்தும் பணி துவங்கப்பட்டு இரண்டரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடிக்கப்படாமல் அப்படியே கிடக்கிறது. பழைய மங்கப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சுற்றுச் சுவர் அமைக்கும் பணியும் மிகவும் காலதாமதமாக துவங்கப்பட்டு, எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே கிடக்கிறது. அரசு பள்ளி களில் வேலை செய்யும் துப்புரவு பணியாளர்களுக்கு வருடக்கணக் கில் சம்பளம் வழங்காமல் நிலுவை யில் உள்ளது.
மிகக் குறைந்த அள வில் வழங்கப்பட்டு வரும் ஊதிய மும் சரியான நேரத்தில் வழங்கப் படவில்லை. எனவே இதற்கு விரைந்து தீர்வு காண வலியுறுத்தி கூட்ட ரங்கின் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது ஊராட்சி ஒன்றிய ஆணையர் குணசேகரன் இதற்கு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதியளித்ததன் பேரில் தர்ணா போராட்டத்தை கைவிட்டார். கூட்டத்தில் துணைத் தலைவர் கலைச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.