districts

img

திருப்பனந்தாள் விஷ ஜந்துக்களின் குடியிருப்பாக மாறிய பேருந்து நிறுத்தங்கள் சீரமைக்கப்படுமா?

கும்பகோணம் ஜன.1 - தஞ்சை மாவட்டம் திருப்ப னந்தாள் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றியச் செயலா ளர் டி.ஜி. ராஜேந்திரன் தலை மையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் காசிநாதன், ஏ.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு  அழைப்பாளராக மாவட்ட குழு உறுப்பினர் சா.ஜீவ பாரதி பங்கேற்றார். கூட்டத்தில் திருப்பனந் தாள் ஒன்றியத்திற்குட்பட்ட கண்ணாரக்குடி, லட்சுமிகுடி, கொண்ட சமுத்திரம் ஆகிய பகுதிகளில் மிகவும் பழமை யான பேருந்து நிறுத்தத்தில் பாம்புகள் உள்ளிட்டவை தங்கி விஷ ஜந்துக்களின் நிறுத்தங்களாக மாறியுள் ளன. நிழற்குடையின் கீழ்  நின்றால் எந்நேரமும் இடிந்து  விழும் நிலையில் பாழடைந் துள்ளது. அதை உடனடி யாக இடித்து விட்டு புதிதாக  பேருந்து நிறுத்தம் கட்டித்தர வேண்டும் எனவும் கண்ணா ரக்குடி பகுதிகளில் நீண்ட  காலமாக வீடு, வீட்டுமனை இல்லாமல் உள்ள தலித் மக்களுக்கு சுமார் 50  பேருக்கு இலவச வீட்டுமனை  பட்டா வழங்கிட வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விரைவில் கண்ணாரக் குடி, லட்சுமிக்குடி, கொண்ட சமுத்திரம் பகுதிகளில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் தங்கியிருக்கும் பேருந்து நிறுத்தங்களை அப்புறப்படுத்தி புதிதாக பேருந்து நிறுத்தங்கள் அமைக்காவிட்டால் மக்க ளைத் திரட்டி சிபிஎம் சார்பில்  நூதன போராட்டங்கள் நடத் துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.