districts

சீதக்கமங்கலம் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா?

திருவாரூர், செப்.1 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் சீதக் கமங்கலம் ஊராட்சியில் உள்ள அரசின் நேரடி கொள் முதல் நிலையத்தை உடனே திறக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. சீதக்கமங்கலம் பகுதி யில் குறுவை பயிரை அறு வடை செய்து கடந்த 10  நாட்களுக்கு மேலாக விவ சாயிகள் தங்கள் வீடுகளி லும், நேரடி கொள்முதல் நிலையத்தில் உள்ள திறந்த வெளி மையத்திலும் வைத் துள்ளனர். கடந்த மாதம் தமிழ்நாடு  விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். தம்புசாமி மற்றும் குடவா சல் சிபிஎம் ஒன்றிய செய லாளர் எம்.கோபிநாத் உள்ளிட் டோர், திருவாரூர் நுகர்வோர் மண்டல மேலாளரிடம் சீதக்கமங்கலத்தில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், தற்போது குடவாசல் வட்டத்தில் 20  இடங்களில் நேரடி கொள் முதல் நிலையம் திறக்கப் பட்டுள்ளது வரவேற்கத்தக் கது. ஆனால் சீதக்கமங்கலத் தில் உள்ள நேரடி கொள் முதல் நிலையம் மட்டும் திறக்கப்படவில்லை. எனவே விவசாயிகளின் நலன் கருதி சீதக்கமங்கலம் நேரடி கொள்முதல் நிலை யத்தை உடனே திறக்க வேண்டுமென சிபிஎம் குட வாசல் தெற்கு பகுதி ஒன்றி யச் செயலாளர் எம்.கோபி நாத் மண்டல முதுநிலை மேலாளருக்கும், ஆட்சிய ருக்கும் கோரிக்கை வைத்து உள்ளார்.