districts

img

கைத்தறிப் பட்டு நூலுக்கு ஜிஎஸ்டி வரியை தள்ளுபடி செய்க!

அரியலூர், ஜன19- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவில் கைத்தறி பட்டு நூல் ஆகிய வற்றிற்கு போடப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி உள்பட அனைத்து வரிகளையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து கைத்தறி நெசவாளர்கள், ஜவுளி உற்பத்தியா ளர்கள், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங் கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.   ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட கை நெசவு தொழிலாளர் சங்க செயலாளர் எஸ்.என்.துரை ராஜ் தலைமை வகித்தார். இதில், கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் மாநி லக்குழு உறுப்பினருமான எம்.சின்னதுரை, சிபிஎம் மாவட்ட செயலாளர் எம்.இளங் கோவன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் கே.மகாராஜன், மாவட்ட செயற்குழு ஆர்.மணிவேல், ஒன்றிய செயலாளர் எம்.வெங்க டாசலம் ஆகியோர் பேசினர்.  ஆர்ப்பாட்டத்தில், கைத்தறி பட்டு நூல் ஆகியவற்றிற்கு போடப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி உட்பட அனைத்து வழிகளையும் ரத்து செய்ய வேண்டும், அரசு அறிவித்துள்ள 10 சதவீத கூலி உயர்வை உடனே அமல்படுத்த வேண்டும், நலவாரிய உறுப்பினர்களுக்கு உதவி தொகை இரண்டு மடங்காக உயர்த்தி கொடுக்க வேண்டும், அமைப்பு சாரா தொழி லாளர்களுக்கு ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.