புதுக்கோட்டை, ஆக.14 - முன்னாள் வட்டாட்சியரும், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத் தின் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகியு மான பி.சிவகுருநாதன் வயநாடு நிவாரண நிதி யாக ரூ.50 ஆயிரத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியிடம் வழங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கததின் புதுக்கோட்டை மாவட்ட ஸ்தாபகத் தலைவர் களில் ஒருவராகவும், வட்டாட்சியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் பி.சிவகுரு நாதன். தற்போது தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகியாக உள்ளார். இந்நிலையில், கேரள மாநிலம் வய நாட்டில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு நிவாரண நிதியை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூலமாக வழங்க முன் வந்தார். அதன்படி நிவாரண நிதியாக ரூ.50,000-ஐ கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.கண்ணம்மாளிடம் பி.சிவகுருநாதன் புதன்கிழமை வழங்கினார். இதில், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் மு.முத்தையா, வட்டச் செயலாளர் என்.ராமச்சந்திரன், வட்டத் தலைவர் தமிழரசன், சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஜி.நாகராஜன், சு.மதியழ கன், துரை.நாராயணன், மாவட்டக் குழு உறுப் பினர் கி.ஜெயபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.