ஈரோடு, செப். 23- கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திருட்டு கண்ட றியப்பட்டு நடவடிக்கை எடுக் கப்பட்டது. ஈரோடு மாவட்டம், கீழ் பவானி பிரதான திட்ட கால் வாயில் கடந்த ஆகஸ்ட் 15 அன்று தண்ணீர் திறக்கப் பட்டு கால்வாயில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கால்வாயில் திடீரென தண்ணீர் குறைவது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறன்று இரவு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது, கோபிசெட்டி பாளையம் வட்டத்திற்குட்பட்ட வெள் ளாங்கோவில் கிராமம் அருகில் மழைநீர் வடி கால் குகை வழி பாதையில் சட்டத்துக்கு புறம் பாக கால்வாயில் உள்ள தண்ணீரை பிவிசி குழாய்கள் மூலம் உறிஞ்சி எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டது. அவை முழுவதும் அகற் றப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற நடவ டிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டால், சட்டரீதியான நடவ டிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப் பட்டுள்ளது.