districts

img

தமிழ் வழியில் படித்து பல்கலை. துணைவேந்தராக பணியாற்றுகிறேன்

சின்னாளப்பட்டி, மார்ச் 9- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் விளை யாட்டு விழா,ஆண்டு விழா, பேரவை நிறைவு விழா,நுண்கலை விழா மற்றும்20-வது பட்டமளிப்பு விழா என ஐம்பெரும் விழா நடைபெற்றது, விழாவிற்கு முதல்வர் கீதா தலைமை வகித்தார்,ஒன்றிய பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் செல்வராஜ்,டிஎஸ்பி செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இயற்பியல் துறை இணைப்பேரா சிரியர் சீனிவாசகன் வரவேற்றார், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக துணைவேந்தர் பஞ்சநதம் இளங்கலை மாணவிகள்-431,முதுகலை மாணவி கள்-149 மற்றும் 4 ஆராய்ச்சி மாணவி களுக்கும் பட்டங்களை வழங்கினர்,இதில் பல்கலைக்கழக அளவில் தங்க பதக்கங் களை வென்ற 7-மாணவிகளை பாராட்டி சிறப்பு பரிசுகளும் வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், 141 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் 12-ம் வகுப்பு முடித்தவர்களில் 30 சத வீதம் பேர் மட்டுமே உயர்கல்வி படிக்கின்ற னர். 70 சதவீதம் பேர் உயர்கல்வி படிப்ப தில்லை. அரசு கல்லூரிகளில் படித்த வர்கள் தான்  அப்துல்கலாம் உட்பட பல ரும் சாதனை படைத்துள்ளனர், தமிழ்  வழியில் படித்து இரண்டு பல்கலைக்கழ கங்களுக்கு துணைவேந்தராக பணி யாற்றி வருகிறேன். சாதனை புரிய மனது இருந்தால் போதும், உடல்நலக்குறைவால் பாதிக்கப் பட்ட கல்கி,படுத்த படுக்கையாக பொன்னி யின் செல்வன் வரலாற்று நாவலை எழுதி னார். நாம் படித்த பள்ளியோ, வாழ்ந்த இடமோ தடையாக இருக்காது” என்று பேசி னார். மேலும் இந்த விழாவில் மராட்டிய மாநில தமிழ் எழுத்தர் பாஸ்கர் மற்றும்  பேராசிரியர்கள் மாணவிகளின் பெற்றோர் கள் கலந்து கொண்டனர்.