நாமக்கல், மார்ச் 11- கால்நடை மருத்துவமனையை பழைய இடத்திலேயே செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி நாமக்கல் ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டம், கொசவம்பட்டி நக ரக்கிளைச் செயலாளர் வி.பி.கருணா நிதி தலைமையில் பொதுமக்கள் திங்க ளன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியரி டம் மனு ஒன்றை அளித்தனர். அம்மனு வில் கூறியிருப்பதாவது, நாமக்கல் நக ரில் திருச்சி சாலையில் சுமார் 50 வருட காலமாக கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இதனால் நாமக் கல் பகுதியில் இருக்கும் பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் ஆடு, மாடு, நாய் போன்ற கால்நடைகளுக்கு சிரம மின்றி கால்நடைகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தனர். தற்போது, அந்த கால் நடை மருத்துவமனையை மோகனூர் சாலை, லத்துவாடியில் உள்ள கால் நடை ஆராய்ச்சி நிலையத்திற்கு மாற்றப் பட்டுவிட்டது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் கால் நடைகளை வண்டி வாகனங்களில் கொண்டு சென்று மருத்துவம் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இத னால் கால நேர விரையம் ஏற்படுகிறது. வாகனங்களில் கொண்டு செல்வதால் பொருளாதார பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, ஏற்கனவே செயல்பட்ட இடத் தில் கால்நடை மருத்துவமனையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், கோட்டை சாலையில் அமைந்துள்ள தாய் சேய் நல விடுதி, சிறிய இடத்தில் செயல்பட்டுக் கொண்டி ருக்கிறது. நாமக்கலில் செயல்பட்ட தலைமை மருத்துவமனையை மருத் துவக்கல்லூரிக்கு மாற்றப்பட்டதால், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள் ளாகி வருகிறார்கள். கோட்டை சாலை யிலுள்ள தாய் சேய் நல விடுதியை மோகனூர் சாலையில் அமைந்துள்ள தலைமை மருத்துவமனை கட்டிடத் திற்கு மாற்றி கொடுத்தால், அதிகமான தாய்மார்கள் பயனடைவார்கள். எனவே, காலதாமதம் செய்யாமல் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ் வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சிபிஎம் சத்யா நகர் கிளைச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியன், கட்சி நிர்வாகிகள் பெரியசாமி, பொன்னுச் சாமி, சரவணன் ஆகியோர் உடனிருந்த னர்.