districts

img

வெண்மணி தியாகிகள் தினம்: மாணவர் சங்கம் பேரணி

நாகப்பட்டினம் மாவட்டம் கீழவெண்மணி தியாகிகள் நினைவு தினத்தை (டிச.25) முன்னிட்டு இந்திய மாணவர் சங்கம் சார்பில் பேரணி நடைபெற்றது. கீழ்வேளூர் அரசாணி குளக்கரையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தொடங்கிய பேரணி, கீழ்வேளூர் கடைத்தெரு வழியாக கருத்தரங்கம் நடைபெற்ற இடத்திற்கு வந்தடைந்தது. இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் கோ.அரவிந்தசாமி, மாநில துணைத் தலைவர் தௌ.சம்சீர் அகமது, நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் மு.ஜோதிபாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.